ப்ளஸ் 2 இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை:
பிளஸ் டூ இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு எழுதும் மாணவர்கள் எல்லாத் தேர்வுகளையும் திரும்ப எழுத வேண்டும் என்றதமிழக அரசின் உத்தரவு செல்லும் என்றும், ஆனால் இந்த உத்தரவு அடுத்த கல்வி ஆண்டு முதல் தான் அமலுக்குவரும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில் இனிமேல் இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு எழுதுபவர்கள் குறிப்பிட்ட பாடத்தை மட்டும் எழுத முடியாதுஎனவும், இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு எழுத விரும்பினால் அனைத்துத் தேர்வுகளையும் திரும்ப எழுத வேண்டும்எனவும் சமீபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து வக்கீல் பாக்கியராஜ் உட்பட 6 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.தலைமை நீதிபதி சுபாஷன்ரெட்டி, நீதிபதி சுப்புலட்சுமி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
ப்ளஸ் 2 இம்ப்ரூவ்மெண்டில் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும், ஆனால் இந்த உத்தரவு அடுத்தகல்வி ஆண்டு முதல் தான் அமலுக்கு வரும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications