சென்னையில் மாணவிகளிடம் நகைகளை கொள்ளையடித்த பெண் கைது
சென்னை:
சென்னையில் பள்ளிக்கூட மாணவிகளிடம் நகைகளை கொள்ளையடித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மற்றும் புறநகர்களில் பள்ளிக்கூட டீச்சரின் தங்கை என்று சொல்லிக் கொண்டு மாணவிகளை அழைத்துச்சென்று அவர்களிடம் இருந்து நகைகளை ஒரு இளம்பெண் திருடிச் சென்றதாக போலீசாருக்கு நிறைய புகார்கள்வந்தன.
சில நாட்களுக்கு முன்பு ஒரே பள்ளியில் படிக்கும் 6 சிறுமிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களுடைய டீச்சரின்தங்கை என்று சொல்லி அழைத்துச் சென்று அந்த மாணவிகள் அணிந்திருந்த நகைகளை கழட்டிக் கொண்டுமாயமாகி விட்டார் அந்த பெண்.
நகைகளைப் பறி கொடுத்த மாணவிகள் கூறிய அடையாளத்தை வைத்து கம்ப்யூட்டரில் ஒரு படத்தை தயாரித்துஅந்த மர்ம பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை விருகம்பாக்கத்தில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்தஒரு பெண்ணை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் பிரேமலதா (24) என்றும் இவர்தான் மாணவிகளின் நகைகளை பறித்துச்சென்றவர் என்றும் தெரியவந்தது. உடனே அந்த பெண் கைது செய்யப்பட்டார்.
இவர் ஏற்கனவே பள்ளி சிறுமிகளை கடத்திச் சென்று நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைதாகி சிறையில்இருந்தவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications