போலி ஆவணங்கள் மூலம் லண்டன் செல்ல முயன்ற இலங்கை அகதி பெங்களூரில் கைது
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
போலி ஆவணங்கள் மூலம் லண்டன் செல்வதற்கு முயன்ற சென்னையைச் சேர்ந்த இலங்கை அகதி பெங்களூர்விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பெங்களூர் விமான நிலையத்தில் இலங்கையைச் சேர்ந்த கீர்த்தியன் என்பவர்மலேசியா வழியாக லண்டன் செல்வதற்காக காத்திருந்தார்.
விமான நிலைய அதிகாரிகள் அவரை சோதனை செய்தபோது லண்டன் செல்வதற்குத் தேவையான ஆவணங்களில்மும்பை இமிக்ரேஷன் அலுவலகத்தின் முத்திரைகள் போலி என்பதைக் கண்டு பிடித்தனர். உடனே அவரை கைதுசெய்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த இலங்கை அகதி என்பது கண்டு பிடிக்கப்பட்டது.இவருக்கு இந்த போலி ஆவணங்களை கனடா நாட்டைச் சேர்ந்த குமரன் என்பவர் தயாரித்துக் கொடுத்ததாகவும்தெரிய வந்துள்ளது.
இது குறித்து குமரனைப் பிடிக்க போலீசார் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications