அரிதான பாம்பே ரத்தவகை: சேலத்தில் 2 பேரிடம் கண்டுபிடிப்பு
சேலம்:
உலகத்திலேயே மிகவும் அரிதான பாம்பே ரத்த வகை, சேலத்தில் 2 பேருக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மனிதர்களின் ரத்த வகையில் ஏ, பி, ஏபி, ஓ என 4 வகை உள்ளது. இதில் நெகட்டிவ், பாஸிட்டிவ் எனவும்வேறுபடுத்தப்படுகிறது. மனித ரத்தத்தில் இந்த வகைகள் தவிர வேறு எதுவும் இல்லை என்று மருத்துவத்துறைநம்பிக்கொண்டிருந்தது.
ஆனால் 1952ம் ஆண்டு உலகத்தில் முதல் முறையாக மனிதனின் ரத்தத்தில் இந்த 4 வகை தவிர வேறு ஒரு வகைஇருப்பது மும்பையில் கண்டு பிடிக்கப்பட்டது. மும்பையில் கண்டு பிடிக்கப்பட்டதால் இந்த வகைக்கு பாம்பே எனபெயரிடப்பட்டது.
இது "ஓ" ரத்த வகையை போலிருந்தாலும், இந்த ரத்தத்தில் "ஆன்ட்டி ஹெச் சீரா" என்ற ரசாயனத்தை சேர்த்துபார்க்கும்போது தான் அரிதான ரத்த வகை தெரிய வரும். இந்த ரத்த வகை உள்ளவர்களுக்கு வேறு எந்த ரத்தவகையை சேர்த்தாலும் மரணம் ஏற்படும்.
உலகத்தில் இந்த ரத்த வகை 135 பேரிடம் மட்டுமே உள்ளது. இந்தியாவில் மட்டும் 20 பேரிடம் உள்ளது.
இந்நிலையில் சேலத்திலும் இந்த "பாம்பே" ரத்த வகையைச் சேர்ந்த 2 பேர் இருப்பது தற்போதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் கொளத்தூர் சேகர், சேலம் வித்யா மருத்துவமனை கேன்டீனில் வேலை செய்து வரும் குமரேசன்ஆகிய 2 பேருக்கும் "பாம்பே" ரத்த வகை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications