திருப்பரங்குன்றம் வந்தது "கண்ணகி சுடர்" பேரணி
திருப்பரங்குன்றம்:
சென்னை மெரீனா கடற்கரையில் இருந்து அகற்றப்பட்ட கண்ணகி சிலையை மீண்டும் வைக்கக் கோரிகன்னியாகுமரியில் இருந்து சென்னைக்குப் புறப்பட்ட பேரணி, "கண்ணகி சுடரு"டன் திருப்பரங்குன்றத்தைவந்டைந்துள்ளது.
அகற்றப்பட்ட கண்ணகி சிலையை மீண்டும் வைக்கக் கோரியும், கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையைஒழுங்காக பராமரிக்கக் கோரியும் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு ஒரு பேரணி கடந்த 12ம் தேதிபுறப்பட்டது.
வ.மு. சேதுராமன் உள்ளிட்ட பல்வேறு தமிழறிஞர்களும், பல்வேறு தமிழ் அமைப்புகளும் இணைந்து இந்தப்வாகனப் பேரணியை நடத்துகின்றன.
திருநெல்வேலி, தூத்துக்குடி, ராஜபாளையம் வழியாக தற்போது திருப்பரங்குன்றத்தை வந்தடைந்துள்ளது இந்தப்பேரணி.
மதுரை, தஞ்சாவூர், திருச்சி ஆகிய நகர்கள் வழியாகச் செல்லும் இந்தப் பேரணி வரும் 21ம் தேதி சென்னைசென்றடையும்.
பேரணியில் பல்வேறு வாகனங்கள் இடம் பெற்றுள்ளன. வரும் வழியில் எல்லாம் கண்ணகி சிலை அகற்றம்குறித்தும், திருவள்ளுவர் சிலையை அரசு சரியாக பராமரிக்காமல் புறக்கணித்து வருவது குறித்தும் மக்களிடையேதமிழறிஞர்கள் பேசுகின்றனர்.












Click it and Unblock the Notifications