நெய்வேலி அனல் மின் நிலைய கோபுரத்திலிருந்து விழுந்து 4 பேர் பலி
நெய்வேலி:
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் உள்ள ஒரு குளிரூட்டும் கோபுரத்தில் வேலை செய்து கொண்டிருந்த 4ஊழியர்கள் தவறிக் கீழே விழுந்ததில் உடல் சிதறி உயிரிழந்தனர்.
நெய்வேலி 2வது அனல் மின் நிலையத்தில் உள்ள ஏழு யூனிட்டுகளில் மின் உற்பத்திக்காக குளிரூட்டும்கோபுரங்கள் உள்ளன.
தற்போது இங்கு பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி ஒரு குளிரூட்டும் கோபுரத்தில் சிமென்ட்வாஷ் செய்யும் பணி நேற்று நடந்து கொண்டிருந்தது.
சுமார் 120 மீட்டர் உயரம் கொண்ட இந்த குளிரூட்டும் கோபுரத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களான தனசேகரன்(28), செல்லப்பெருமாள் (22), ஜெயக்குமார் (24) மற்றும் செந்தில் (23) ஆகிய 4 பேரும் இரும்பு கயிற்றில்தொங்கியபடி குளிரூட்டும் கோபுரத்தில் சிமென்ட் வாஷ் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்தக் கயிறு அறுந்து விட்டது. இதனால் அதில் தொங்கியபடி வேலை செய்துகொண்டிருந்த 4 பேருமே தரையில் விழுந்து உடல் சிதறி உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அனல் மின் நிலைய உயரதிகாரிகளும் போலீசாரும் விரைந்து வந்துவிசாரணை நடத்தினர்.












Click it and Unblock the Notifications