ஆண்டிப்பட்டி தேர்தலை தள்ளிவைக்க வேண்டும்: இளங்கோவன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆண்டிப்பட்டியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அத்தொகுதி வேட்பாளரான ஜெயலலிதா பிரச்சாரம் செய்துவருவதால் அங்கு தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் இன்று(வெள்ளிக்கிழமை) கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:
ஆண்டிப்பட்டி தொகுதியில் அதிமுக அரசும் அதிகாரிகளும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெயலலிதாவும் பல்வேறு அரசு நலத் திட்டங்களை அறிவித்து மக்களிடம் ஓட்டுக் கேட்கிறார்.
இதனால் ஜெயலலிதாவின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேலும் இவ்வாறு விதிமுறைகள் மீறப்படுவதால் ஆண்டிப்பட்டி தொகுதி தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டும்என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications