அண்ணா பல்கலை.யில் ரூ.4.5 கோடியில் நுண் துணைக் கோள் தயாரிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நாட்டிலேயே முதல் முறையாக ரூ.4.5 கோடி செலவில் நுண் துணைக் கோள் ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம்உருவாக்கவுள்ளது.

இந்தத் துணைக் கோளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமும், அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்துதயாரிக்க உள்ளன.

சூரியனிலிருந்து 40 வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு, அதன் சுழற்சிவிண்ணில் நிலை நாட்டப்படும் வகையில் இந்தத் துணைக் கோளைச் சிறப்பாகத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தகவல் தொடர்பை நிறைவு செய்யும் வகையில் இந்தத் துணைக் கோள் உருவாக்கப்பட உள்ளது. இந்தத் துணைக்கோள் மூலம் பல இடங்களிலிருந்து மாணவர்கள் படிப்பு சம்பந்தமாக பல்கலைக்கழகத்துடன் தகவல்களைபரிமாறிக் கொள்ள முடியும்.

மேலும் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இந்த துணைக் கோள்பெரிதும் உதவும்.

இந்தத் துணைக் கோள் அடுத்த 3 வருடங்களில் தயாரித்து முடிக்கப்பட்டு விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல்கலைக்கழகத்தில் இவ்வகையான நுண் துணைக் கோள் தயாரிக்கப்படுவது இந்தியாவில் இதுதான் முதல் முறைஎன்று கூறிய இஸ்ரோவின் தலைவர் டாக்டர் கஸ்தூரி ரங்கன், இதற்கு முன் இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனிமற்றும் கொரியா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் இதுபோன்ற நுண் கோள்தயாரிக்கப்பட்டுள்ளன என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+