தேர்தல் விதிகளை மீறுகிறார் ஜெ.: கருணாநிதி குற்றச்சாட்டு
சென்னை:
ஆண்டிப்பட்டி தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்வதாகதிமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் நேற்று (வியாழக்கிழமை) கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
அரிசி விலையை உயர்த்த மாட்டோம் என்றும் தேனியில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்றும்ஆண்டிப்பட்டியில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்றும் கூறி ஜெயலலிதா பிரச்சாரம் செய்து வருகிறார்.
இவை அனைத்துமே தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல்களாகும். இதையெல்லாம் மக்கள் சிந்திக்க வேண்டும்.
இதுகுறித்து நாங்கள் தொடர்ந்து தேர்தல் கமிஷனுக்குப் புகார்கள் அளித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
மேலும் ஆண்டிப்பட்டி தொகுதி வாக்காளர் பட்டியலில் உள்ள போலி வாக்காளர்களை நீக்கிவிட்டு தேர்தல்நடத்தலாம் என்றுதான் நாங்கள் சொல்கிறோமே தவிர, தேர்தலே அங்கு நடக்கக் கூடாது என்பது எங்கள்கோரிக்கை அல்ல.
காவிரிப் பிரச்சனையில் தமிழக அரசு மேற்கொள்ளும் நியாயமான நடவடிக்கைகளுக்கு திமுக ஆதரவளிக்கும்என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications