சிறுவர்கள் கடத்தல்: புலிகள் மீது ரணில் புகார்
கொழும்பு:
சிறுவர்களை கடத்திச் சென்று விடுதலைப்புலிகள் பணம் பறிப்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேபுகார் கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகளும், இலங்கை அரசும் தற்காலிக போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளன. இதை நிரந்தர போர்நிறுத்தமாக மாற்றுவதற்கும் இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனால் இரு தரப்பினருமேஎதிர்தரப்பை தாக்கி அறிக்கை விடாமல் கவனமாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் முதல் முறையாக விக்கிரமசிங்கே விடுதலைப்புலிகளை கண்டித்து இன்று (செவ்வாய்க்கிழமை)அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் விக்கிரமசிங்கே கூறியிருப்பதாவது:
இலங்கை அரசின் ஆக்கிரமிப்பில் உள்ள திரிகோணமலையைச் சேர்ந்த பிலாசன் சசிகரன் (14) மற்றும் எஸ்.தாவரசவாசன் (17) ஆகிய 2 சிறுவர்களை விடுதலைப்புலிகள் பலவந்தமாக கடத்திச் சென்றுள்ளனர்.
மேலும் அந்தச் சிறுவர்களைப் பணயமாக வைத்துக் கொண்டு அவர்களுடைய பெற்றோரிடம் பணத்தையும்விடுதலைப்புலிகள் பறித்துள்ளனர்.
மேலும் 3 பெண்களை கடத்திச் சென்று, விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாமில் அடைத்து வைத்துள்ளனர்.
ஆனால் அந்தப் பெண்கள் அங்கிருந்து தப்பிச் சென்று தற்போது மட்டக்களப்பு போலீசாரிடம் பாதுகாப்பாகஇருக்கின்றனர் என்று விக்கிரமசிங்கே அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications