For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான திமுகவினர் கைது

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

ஆண்டிப்பட்டி தேர்தலையொட்டி முன்னெச்சரிக்கையாக மதுரை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான திமுகவினர்கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கைது நேற்றிரவில் வடுகபட்டியில் கைது செய்யப்பட்டார்.திமுகவினரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தட்டிக் கேட்க சென்றபோது அவர் கைதுசெய்யப்பட்டார்.

அவருக்கு ஆதரவாகப் பேசச் சென்ற பொன்முத்துராமலிங்கமும் காவலில் வைக்கப்பட்டார். அவருடன் மேலும் பலதிமுகவினரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் தவிர மதுரை மாநகராட்சியின் 2 திமுக கவுன்சிலர்களும் அவர்களின் ஆதரவாளர்கள் 30 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தின் பல்வேறு திமுக தொண்டர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் முன்னெச்சரிக்கைநடவடிக்கையாக கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே, அதிமுகவினர் கள்ள ஓட்டுபோடுவதற்கு வசதியாக ஓட்டே இல்லாத பல பேருக்கு கிராமஅதிகாரிகள் அவசர அவசரமாக போலி ஆவணங்களைத் தயார் செய்து கொடுத்துள்ளதாகவும திமுகவினர் புகார்கூறியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X