ஆண்டிப்பட்டியில் நடப்பது தேர்தல் அல்ல, ஜனநாயகப் படுகொலை: கருணாநிதி
சென்னை:
ஆண்டிப்பட்டி தேர்தலில் அதிமுகவினர் பெரும் அளவில் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக திமுக தலைவர்கருணாநிதி குற்றம் சாட்டினார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,
ஆண்டிப்பட்டியில் பெரும் முறைகேடுகளுடன் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. அங்கு ஜனநாயகப் படுகொலைநடந்து கொண்டிருக்கிறது.
எதிர்க் கட்சிக்காரர்களை மிரட்டுவது, அடித்து உதைப்பது போன்ற செயல்களில் அதிமுகவினர் ஈடுபட்டுள்ளனர்.
பல திமுகவினர் தாக்கப்பட்டுள்ளனர். சில தொண்டர்களின் கால்கள் கூட உடைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இந்தத்தொண்டர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு இவர்கள் மீதே வழக்குகளையும் பதிவுசெய்துள்ளது போலீஸ்.
போலீஸ் அராஜகம் கட்டுக்கடங்காத அளவுக்குப் போய்விட்டது. தேர்தல் பணிக்காக சென்ற ஈரோடுமாவட்டத்தைச் சேர்ந்த திமுக பிரமுகரின் காரை அதிமுகவினர் தாக்கி உடைத்துள்ளனர். அந்த காருக்கு தீவைக்கவும் முயற்சி நடந்துள்ளது.
வாக்குச் சாவடிகளில் எதிர்க் கட்சி ஏஜெண்டுகளை போலீசார் உதவியுடன் அடித்து விரட்டிவிட்டு அங்குஅதிமுகவினரே வாக்குகளைப் போட்டு வருகின்றனர் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications