மண்டபம் அகதிகள் முகாமில் 7 விடுதலைப்புலிகள் கைது
Subscribe to Oneindia Tamil
மண்டபம்:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்த 7 விடுதலைப்புலிகளை போலீசார் கைதுசெய்தனர்.
மண்டபம் பகுதியில் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு அகதிகள் என்றபோர்வையில் 7 விடுதலைப்புலிகள் தங்கியிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த முகாமில் கியூ பிராஞ்ச் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது இந்த 7 பேரும்பிடிபட்டனர்.
பிடிபட்ட 7 பேரும் இலங்கையின் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தஇந்த 7 பேரும் கடந்த ஜனவரி மாதம் அங்கிருந்து தப்பி மண்டபம் முகாமிற்கு வந்து சேர்ந்தனர்.
கைதானவர்களில் 3 பேர் வேலூர் சிறப்பு முகாமிற்கும், மற்ற 4 பேர் செங்கல்பட்டு மாவட்டம் புழல் அகதிகள்முகாமிற்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications