பிட் அடித்ததைக் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி
சென்னை:
பிட் அடித்ததை ஆசிரியை கண்டித்ததால் அவமானமாக உணர்ந்த மாணவி பள்ளி வளாகத்திலேயே தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள தாமரைக்குளம்பட்டியைச் சேர்ந்தவர் தீபா. இவர் வேட்ராம்பட்டி அரசுஉயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். பள்ளியில், செவ்வாய்க்கிழமை பரீட்சை நடந்தது.
இந்தப் பரீட்சையின் போது, தீபா உள்ளிட்ட சில மாணவிகள் விடைகளை தாளில் எழுதி மறைத்து வைத்திருந்துபரீட்சை எழுதியுள்ளனர் என்று தெரிகிறது. இதைப் பார்த்து விட்ட ஆசிரியை சாந்தி, தீபா மற்றும் 5மாணவிகளையும் கண்டித்துள்ளார்.
பின்னர் ஐந்து பேரையும் வகுப்புக்கு வெளியே வெயிலில் நிற்க வைத்துள்ளார். மாலையில் வகுப்பு நேரத்திற்குப்பிறகு 5 பேரும் தனியாக மீண்டும் பரீட்சை எழுத வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மற்ற மாணவிகள் முன்னிலையில் ஆசிரியை தன்னை திட்டியதை தீபா அவமானமாக எடுத்துக் கொண்டுள்ளார்.இந்த நிலையில் மாலையில் பள்ளிக்கு அருகே உள்ள ஆற்றுப் பகுதிக்கு சென்றுள்ளார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தப் பக்கமாக சென்ற கார்த்திக் என்ற மாணவர் தீபா தூக்கில் பிணமாக தொங்கியநிலையில் இருப்பதைக் கண்டு ஆசிரியர்களிடம் தெவித்துள்ளார்.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. மாணவி பள்ளி வளாகத்தில் தூக்கில் தொங்கியதைஅறிந்தவுடன் ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கலெக்டர் அபூர்வா உள்ளிட்டோர் அங்கு வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலையச் செய்தனர்.இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.