இன்று புலிகள் பகுதிக்கு செல்கிறார் ரணில் விக்கிரமசிங்கே
கொழும்பு:
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு இலங்கைப் பகுதிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்றுபயணம் மேற்கொள்ள உள்ளார். அவரது வருகைக்கு விடுதலைப் புலிகள் அனுமதி தந்ததோடு, இந்த செயலைவரவேற்றும் உள்ளனர்.
நேற்று தான் இரு தரப்பினரும் நார்வே நாடு உருவாக்கிய நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல்அளித்தனர். சில தினங்களில் இந்த ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திடவுள்ளனர்.
35 லட்சம் தமிழர்கள் வசித்து வரும் வடக்கு இலங்கை பகுதிக்கு பல ஆண்டுகளாக எந்த பிரதமரும் வந்ததில்லை.
பிரதமரின் இந்தப் பயணம் இலங்கையில் நிரந்தர அமைதி ஏற்படவும், தமிழர்கள் சம உரிமையுடன் வாழவும் வழிவகுக்கும் என ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் கூறினார்.
சில வாரங்களுக்கு முன்பு தான் யாழ்பாண நெடுஞ்சாலையை இரு தரப்பினரும் திறந்தனர். 1999ம் ஆண்டு முதல்இந்த நெடுஞ்சாலையை புலிகள் மூடி வைத்திருந்தனர்.