ஜெ.க்கு பிரச்சாரம் செய்த 5 காங்கிரசார் களையெடுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஆண்டிப்பட்டியில் பிரச்சாரம் செய்த மதுரை மாவட்டகாங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்த 5 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக கூட்டணியிலிருந்து தமிழக காங்கிரஸ் கட்சி விலகி விட்டது. ஆனாலும் சில காங்கிரஸ் தலைவர்கள்தொடர்ந்து அதிமுக ஆதரவு தந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆண்டிப்பட்டி தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சில காங்கிரஸ் தலைவர்கள்கூறியிருந்தனர். அவர்களில் முக்கியமானவர் முன்னாள் தலைவர் தங்கபாலு.

கட்சியின் கொள்கைக்கு விரோதமாக கருத்துக் கூறியதற்காக தங்கபாலுவுக்கு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இளங்கோவன்தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி விழுப்புரம் மற்றும் வட சென்னை மாவட்டகாங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு நீக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் தங்கபாலுவின் ஆதரவாளர்கள்.

இந்த வரிசையில், ஆண்டிப்பட்டி தொகுதியில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி ஜெயலலிதாவுக்காக பிரசாரம் செய்தமதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 பேரை இளங்கோவன் கட்சியிலிருந்து நீக்கியுள்ளார். மதுரைக்குச்சென்றிருந்த இளங்கோவன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

மதுரை மாவட்ட ன்னாள் தலைவர் கணபதி உள்ளிட்ட 5 பேரும், மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன்ஆலோசனை செய்த பிறகே நீக்கப்பட்டுள்ளனர். கட்சி நலன் கருதி இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளகட்சி மேலிடம் எனக்கு அனுமதி வழங்கியுள்ளது.

நான் அனுப்பியுள்ள நோட்டீஸிற்கு தங்கபாலு உரிய பதிலை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+