போலீசாரிடமிருந்து 2வது முறையாக கைதி கடத்தல்
கரூர்:
கரூர் அருகே நீதிமன்றத்திற்கு கைதி ஒருவரைக் கொண்டு செல்லும் வழியில் 2 பேர் போலீசாரின் கண்களில்மிளகாய்ப்பொடியைத் தூவி கைதியை கடத்திச் சென்றனர்.
சில தினங்களுக்கு முன்பு தான் போலீசின் மெத்தனத்தால் சேலம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கைதிஒருவன் பட்டப் பகலில் கடத்தப்பட்டான். இப்போது 2வது முறையாக கரூரில் ஒரு கைதி கடத்தப்பட்டுள்ளான்.
பாளையங்கோட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி தங்கராஜ். சிதம்பரத்தை சேர்ந்த மதிமுக பிரமுகர் கொலை வழக்கில்சம்பந்தப்பட்டிருப்பதால் நீதிமன்றத் தீர்ப்பின் படி கரூரில் இருந்து வந்தான்.
அப்போது கரூரில் உள்ள ஹோட்டல் முதலாளி நாச்சியப்பன் என்பவரை வெட்டி கொலை செய்ய முயன்றவழக்கில் கைதாகி வேலூர் மத்திய சிறையில் தங்கராஜ் அடைக்கப்பட்டிருந்தான்.
இந்த வழக்கு சம்பந்தமாக தங்கராஜை வேலூர் சிறையில் இருந்து 2 போலீசார் கரூருக்கு அழைத்து வந்தனர். கரூர்ஆலமரத் தெரு அருகே வந்து கொண்டு இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசின் கண்களில்மிளகாய்ப் பொடியைத் தூவி விட்டு, தங்கராஜைக் கண்ணிமைக்கும் நேரத்தில் கடத்திச் சென்றனர்.
இந்த சம்பவம் கரூர் மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கடத்தப்பட்ட கைதியையும் கடத்தல்கும்பலையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications