ஜெ. பதவியேற்பு விழா : ஸ்டாலினுக்கும் அழைப்பு
சென்னை:
முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்புஅனுப்பப்பட உள்ளது.
தமிழகத்தின் புதிய முதல்வராக ஜெயலலிதா மார்ச் 2ம் தேதி பதவியேற்கவுள்ளார். ஜெயலலிதாவுக்கு மிகவும் ராசியான சென்னைசேப்பாக்கத்தில் உள்ள சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இதற்காகமண்டபத்தைப் புதுப்பிக்கும் பணி படு ஜரூராக நடந்து வருகிறது.
பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு அனுப்ப வேண்டிய பிரமுகர்கள் குறித்தப் பட்டியல் தயாராகி விட்டதாகக் கூறப்படுகிறது.அதில் சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலினும் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த முறை எம்.எல்.ஏ ஆகாமலேயே ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றபோது மேயர் ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை.இதுகுறித்து அதிமுகவினர் குறை கூறினர். ஆனால் அழைப்பு வராத காரணத்தால்தான் தான் கலந்து கொள்ளவில்லை என்று ஸ்டாலின்விளக்கம் அளித்தார்.
இந் நிலையில் தற்போது ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ள ஸ்டாலினுக்கும் அழைப்புஅனுப்பப்படவுள்ளது. மொத்தம் 1000 பேர் வரைக்கும் அழைப்பிதழ் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.