பழனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
பழனி:
பழனி அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள புளியம்பட்டியில் குப்புசாமி என்பவர் கோழிப்பண்ணைவைத்திருந்தார். இத்தொழிலில் அவர் பெருத்த நஷ்டமடைந்தார்.
மேலும் பல பேரிடம் கடன்களும் வாங்கிவிட்டு அவற்றைத் திருப்பித் தர முடியாமல் மனம் நொந்த நிலையில்குப்புசாமி இருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று (புதன்கிழமை) தன் மனைவி மற்றும் 2 மகள்களுடன் விஷ மாத்திரை சாப்பிட்டு குப்புசாமிதற்கொலை செய்து கொண்டார்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 4 பேரையும் பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் பழனி மருத்துவமனையில்சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் 4 பேரும் இறந்து விட்டனர்.
இந்தச் சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இது குறித்துவழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.