ஜாமீனில் விடுதலையானார் ராஜகோபால்
சென்னை:
ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவருடன் சேர்த்துக் கைதுசெய்யப்பட்ட 8 பேரும் கூட ஜாமீனில் விடுவிக்கப்பட்டு விட்டனர்.
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஜீவஜோதி என்ற பெண்ணை மிரட்டி திருமணம் செய்து கொள்ளமுயன்றதாகவும், அவரது கணவர் சாந்தகுமாரை கொலை செய்ய உத்தரவிட்டதாகவும் கூறி ராஜகோபால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவருடன் சேர்த்து அவரது சரவண பவன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 8 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தற்போது இவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராஜகோபால் மற்றும் 8பேரும் நேற்று (புதன்கிழமை) ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
இரு நபர் உத்தரவாதம் மற்றும் ரூ. 50,000 ரொக்க ஜாமீனில் இவர்களை சைதாப்பேட்டை 9-வது மெட்ரோபாலிடன்மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விடுதலை செய்தது.
தினசரி வேளச்சேரி காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்துப் போட வேண்டும் என்று ராஜகோபாலுக்குநிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications