For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாமியார் உடைத்தால் மண் சட்டியா? - ஜெ.க்கு கருணாநிதி கேள்வி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மாமியார் உடைத்தால் மண் சட்டி, மருமகள் உடைத்தால் பொன் சட்டி என்ற பழமொழிக்கு இலக்காக ரயில்வேகட்டண உயர்வு சாதாரண மக்களைப் பாதிக்கும் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார் என்று திமுக தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.

ரயில் கட்டண உயர்வால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஜெயலலிதா கூறியிருந்தார். இதைவிமர்சிக்கும் வகையில் சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் திமுக தலைவர் கருணாநிதிநிருபர்களிடம் கூறியதாவது:

சென்னையில் இருந்து திருச்சிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் 2ம் வகுப்பு கட்டணம் ரூ.83லிருந்து ரூ.88 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது. ரிசர்வேஷன் இல்லாமல் போனால் திருச்சிக்கு வெறும் ரூ.48 மட்டுமே.

ரயில் கட்டணம் சாதாரண மக்களை பாதிக்கும் என்று சொல்லும் ஜெயலலிதா, சென்னையில் இருந்து திருச்சிக்குவிரைவு சாதாரண பஸ் கட்டணத்தை ரூ.81ல் இருந்து ரூ.104 ஆக உயர்த்தியுள்ளார். அதாவது ரூ.23 அதிகம்.இதற்கு ஜெயலலிதா என்ன சமாதானம் சொல்லப் போகிறார்?

மதுரைக்கு 2ம் வகுப்பு ரயில் கட்டணத்தில் தற்போது ரூ.9 உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் பஸ்ஸில் ரூ.31அதிகப்படுத்தியுள்ளார். இப்படி ஒவ்வொன்றாக சொல்லலாம்.

மாமியார் உடைத்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் பொன்சட்டி என்ற பழமொழிக்கு இலக்காக ஜெயலலிதாஇந்த ரயில் கட்டண உயர்வு சாதாரண மக்களைப் பாதிக்கும் என்று சொல்லியிருக்கிறார் என்று கருணாநிதி கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X