For Daily Alerts
Just In
வணக்கம் சொல்லிக் கொண்ட ஜெ.- ஸ்டாலின்
சென்னை:
பதவியேற்பு விழா முடிந்த பின்னர் ஜெயலலிதா முக்கியப் பிரமுகர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு வந்தார்.
அங்கிருந்த தொழிலதிபர்கள், சினிமா பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.
ஸ்டாலின் அருகே வந்தபோது முதலில் ஸ்டாலினே சிரித்தபடி வணக்கம் தெரிவித்தார். பதிலுக்கு ஜெயலலிதாவும்அவரைப் பார்த்து சிரித்தபடியே வணக்கம் கூறினார்.
ஆச்சி மனோராமா அருகே வந்தபோது அவரைக் கட்டித் தளுவி முத்தமிட்டார் ஜெயலலிதா. ஆச்சியும் கட்டிப்பிடித்துக் கொண்டார்.
ஆண்டிப்பட்டி முதல்வர் ஜெயலலிதா... வாழ்க என ஆண்டிப்பட்டியில் இருந்து வந்திருந்த தொண்டர்கள்கோஷமிட அவர்களைப் பார்த்து சிரித்தபடியே இரட்டை விரலைக் காட்டி கையசைத்தார் ஜெயலலிதா.
Comments
Story first published: Saturday, March 2, 2002, 5:30 [IST]