புத்தர் சிலையின் தலை கிடைத்தது
சென்னை:
சென்னை அருங்காட்சியகத்தில் காணாமல் போன புத்தர் சிலையின் தலை புதரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னையில் சில மாதங்களாக திடுக்கிடும் சம்பவங்கள் நிறைய நடந்து வருகின்றன. முதலில் கடற்கரை சாலையில்உள்ள கண்ணகி சிலை காணாமல் போனது. பின்னர் தான் அதை அரசு அகற்றியது தெரியவந்தது.
இந் நிலையில் சென்னை அருங்காட்சியகத்தில் இருந்த புத்தர் சிலையின் தலை மாயமாக மறைந்தது. இங்கு தான்கண்ணகி சிலையை அரசு வைத்துள்ளதாகக் கூறுகிறது. ஆனால், இதுவரை யாருக்கும் காட்டவில்லை.
2,000 ஆண்டு பழமை வாய்ந்த புத்தர் சிலையின் தலை காணாமல் போனது பெரும் அதிர்ச்சியைத் தந்தது.
தலை மட்டும் காணாமல் போனது சந்தேகத்தை கிளப்பியது. அந்த தலையை அருங்காட்சியகத்தில் வேலைசெய்யும் யாரோ சிலர் தான் திருடி இருக்க முடியும் என்று போலீசார் சந்தேகித்தனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதில் சுவர் ஓரத்தில் உள்ள புதர் ஒன்றில் புத்தர் சிலையின் தலை இரண்டாகபிளந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலையை துண்டித்து எடுத்துச் சென்றது யார்? அதை இப்போதுஉடைத்துப் போட்டது யார் என்று தெரியவில்லை.
அருங்காட்சியகத்தில் என்ன தான் நடக்கிறதோ புரியவில்லை.












Click it and Unblock the Notifications