சென்னை திரும்பினார் சங்கராச்சாரியார்: 15ம் தேதி அயோத்தியில் பூமி பூஜை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அயோத்தியில் பிரச்சனைக்குள்ளாகாத இடத்தில் கோவில் கட்டுவதற்கு வரும் 15ம் தேதி பூமி பூஜை நடைபெறும்என காஞ்சி சங்கராச்சாரியார் கூறினார்.

கடந்த 4 நாட்களாக டெல்லியில் முகாமிட்டு வி.எச்.பி, ராமஜென்ம பூமி அறக்கட்டளை, இஸ்லாமிய சட்ட வாரியம்,பாபர் மசூதிக் கமிட்டி ஆகிய அமைப்பினருடன் பேச்சு நடத்தினார்.

இதன் பின்னர் இன்று சென்னை திரும்பிய காஞ்சி சங்கராச்சாரியாருக்கு விமான நிலையத்தில் பல இஸ்லாமியஅமைப்புகள் சிறப்பான வரவேற்பளித்தன.

டெல்லியில் வி.எச்.பி. மற்றும் முஸ்லீம் சட்ட வாரியம் இடையே அவர் சமானதானப் பேச்சு நடத்தினார். கோவில்கட்ட பிரச்சனைக்குள்ளாகாத நிலத்தைத் தர முஸ்லீம்களை ஒப்புக் கொள்ள வைத்தார். அதே போல பாபர் மசூதிஇடிக்கப்பட்ட இடம் தொடர்பான விஷயத்தில் நீதிமன்றம் தரும் எந்தத் தீர்ப்பையும் ஏற்க வி.எச்.பியை பணியவைத்தார்.

இதையடுத்து பூமி பூஜை நடத்த பிரச்சனைக்குள்ளாகாத நிலத்தை வி.எச்.பியிடம் வழங்குமாறு பிரதமர்வாஜ்பாயிடம் கூறிய அவர் இன்று சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் அவருக்கு பா.ஜ.க. மாநிலப் பொதுச் செயலாளர் இல.கணேசன் மற்றும் இஸ்லாமியஅமைப்பினர் வரவேற்பு அளித்தனர்.

அவரது வருகையையொட்டி ஏராளமான நிருபர்கள் விமான நிலையத்தில் கூடினர். நிருபர்களிடம் காஞ்சிசுவாமிகள் கூறியதாவது:நீதிமன்ற விசாரணைக்கு அப்பாற்பட்ட, பிரச்சனைக்கு சம்பந்தமில்லாத நிலத்தில் கோவில்கட்ட பூமி பூஜை நடத்த அனுமதி தர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளிடமும், அயோத்தி நகராட்சியிடமும்கோரிக்கை விடுத்துள்ளோம். அனுமதி தருவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இன்று மாலைக்குள்முடிவெடுக்கும்.

நிலத்தைத் தருவது தொடர்பாக இஸ்லாமிய சட்ட வாரியம் வரும் 10ம் தேதி தனது முடிவைத் தெரிவிக்கும். மற்றஅமைப்புகள் 13ம் தேதி தங்கள் முடிவைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளன. எல்லோரும் நல்ல முடிவையேஅறிவிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இதன் பின்னர் வரும் 15ம் தேதி அந்த இடத்தில் ஒரே ஒரு கல்லை மட்டும் வைத்து பூஜை நடத்தப்படும். இது ஒருஅடையாள பூஜை தான். பின்னர் இந்த நிலம் ராமஜென்ம பூமி அறக்கட்டளையிடம் கோவில் கட்டுவதற்காகஒப்படைக்கப்படும்.

இடத்தை கோவில் கட்ட ஒப்படைக்கும் முன் அது தொடர்பாக இஸ்லாமிய மதத்தினருடனும், அரசியல்கட்சிகளுனும் விவாதித்து அவர்களின் ஒப்புதல் பெறப்படும்.

மசூதி இடிக்கப்பட்ட இடம் தொடர்பாக எந்த அமைப்பும் எந்தக் கருத்தையும் தெரிவிக்க முடியாது. இதில்நீதிமன்றம் எடுக்கும் முடிவு தான் இறுதியானது.

பூமி பூஜை அமைதியாக, மகிழ்ச்சியான சூழ்நிலையில் நடக்கும். மதத்தின் பெயரால் மனிதர்கள் மிருகங்களாகமாறிவிடக் கூடாது. எல்லா பிரச்சனைகளையும் பேசித் தான தீர்க்க வேண்டும்.

பத்திரிக்கைகள் பொறுப்புணர்வுடன் நடந்து பிரச்சனை தீர உதவும் செய்திகளை மட்டுமே வெளியிட வேண்டும்.இதைச் செய்தாலே 50 சதவீத பிரச்சனை தீர்ந்துவிடும் என்றார் சுவாமிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+