பெரம்பலூருடன் இணைப்பை எதிர்த்து அரியலூரில் பந்த்
அரியலூர்:
பெரம்பலூர் மாவட்டத்துடன் அரியலூர் மாவட்டத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூர்மாவட்டத்தில் இன்று (திங்கள்கிழமை) பந்த் நடைபெறுகிறது.
கடந்த சனிக்கிழமை தமிழக சட்டசபையில் ஆளுநர் உரையின்போது, பெரம்பலூர் மாவட்டத்துடன் அரியலூர்மாவட்டம் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு அரியலூர் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அறிவிப்புவெளியானவுடனேயே அன்று அரியலூரில் உள்ள ஆட்டோ, டாக்சிகளில் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டன.
மேலும் நேற்று அரியலூரில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து அரியலூரில்போக்குவரத்தும் தடைபட்டது. போலீஸ் பாதுகாப்புடன் சில பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் முழுவதும் இன்று ஒருநாள் பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்றுகாலை 6 மணிக்கே பந்த் தொடங்கி விட்டது.
அரியலூர் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டு, போக்குவரத்தும் தடைபட்டுள்ளதால் அங்கு இயல்புவாழ்க்கை முழுவதுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கடைகள் மற்றும் வீடுகளில் கறுப்புக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகள்மூடப்பட்டிருந்தாலும், பிளஸ் டூ மாணவர்கள் எழுதும் பொதுத் தேர்வுகள் பாதிக்கப்படவில்லை.
பந்த்தையொட்டி அரியலூர் மாவட்டம் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக நேற்றைய கடையடைப்பின்போது ஊர்வலம் செல்ல முயன்ற திமுக, பாமக மற்றும் தமாகாவைச் சேர்ந்த20 தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications