இமாம் அலியை பிடிக்க நெல்லையில் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை
மதுரை:
மதுரை திருமங்கலம் அருகே அல் உம்மா தீவிரவாதிகளை அதிரடியாக மீட்டுச் சென்ற சம்பவத்தில் மேலும் 8 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை அருகே திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் சமீபத்தில் டாடா சுமோ காரில் வந்த சிலர், வெடிகுண்டுகளைவீசியும் துப்பாக்கியால் சுட்டும், இமாம் அலி மற்றும் ஹைதர் அலி ஆகிய அல்-உம்மா தீவிரவாதிகளைக் கடத்திச்சென்றனர்.
இந்த சம்பவத்தில் இதுவரை மீட்டுச் செல்லப்பட்ட அல் உம்மா தீவிரவாதி ஹைதர் அலி உள்பட 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடைசியாக ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் என்ற இடத்தில் செருப்புக் கடை சையதுஎன்று அழைக்கப்படும் சையது இப்ராகிம் கைது செய்யப்பட்டான்.
அவனிடம் நடத்திய விசாரணையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த மீட்பு சம்பவத்தில் தொடர்புடைய மேலும்7 பேர் பதுங்கியுள்ளதாக தெரிய வந்தது.
இதையடுத்து மதுரை தனிப்படை போலீஸார் திருநெல்வேலி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து திருநெல்வேலி காவல்துறைக் கண்காணிப்பாளர் கண்ணப்பன் தலைமையில் போலீஸார் நெல்லைமாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதிக்கு விரைந்தனர்.
அங்கு ஒரு வீட்டில் மறைந்திருந்த 7 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் கிடைத்த தகவலின் பேரில்செங்கோட்டையில் பதுங்கியிருந்த ஒரு நபரை கைது செய்தனர்.
செங்கோட்டையில் பிடிபட்ட நபர், தீவிரவாதிகள் தப்பியோடியபோது, மதுரை கருப்பாயூரணி பகுதியில் போலீஸ்சப் இன்ஸ்பெக்டரைத் தாக்கியவர் என்று தெரிய வந்துள்ளது. சப் இன்ஸ்பெக்டரிடமிருந்து அவர் பறித்துச் சென்றவாக்கி டாக்கியையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த 8 பேரிடம் விசாரணை செய்ததில் இமாம் அலி திருநெல்வேலியில் தான் பதுங்கியிருப்பதாக போலீசார்நம்புகின்றனர். இதனைத் தொடர்ந்து பனைக்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் ஹெலிகாப்டர் மூலம்போலீசார் தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications