மருத்துவத் துறைக்கு தொடர்ந்து களங்கம்: விபச்சாரம் செய்த பெண் டாக்டர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டாக்டர் தொழிலை விட விபச்சாரத்தை பெரிதாக கருதி அதை நடத்தி வந்த பெண் சித்த மருத்துவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கோவையைச் சேர்ந்தவர் டாக்டர் ஜானகி. அதே ஊரைச் சேர்ந்த டாக்டர் கெளரி சங்கருக்கும் அவருக்கும் சிலஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

சித்த மருத்துவம் படித்துள்ள ஜானகி, டாக்டராக பிராக்டிஸ் செய்யாமல் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வந்தார்.இந்த நிலையில், ஜானகியுடன் வாழப் பிடிக்காத கெளரி சங்கர், அவரை விட்டுப் பிரிந்து வேறு ஒரு பெண்ணைத்திருமணம் செய்து கொண்டார்.

இதனால் மன வேதனை அடைந்து சென்னை வந்த ஜானகி, கோடம்பாக்கத்தில் ஒரு அழகு நிலையத்தைஆரம்பித்தார். ஆனால் பிசினஸ் சரியாக நடக்கவில்லை.

இதையடுத்து துணிச்சலுடன் அந்த விபரீதமான முடிவை எடுத்தார். விபச்சாரத்தில் ஈடுபட முடிவு செய்த ஜானகி,பணக்காரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோராகப் பார்த்து தேர்வு செய்து தனது தொழிலை ஆரம்பித்தார்.

இந்தத் "தொழிலில்" நல்ல பணம் கிடைக்கத் தொடங்வே, அதன் பின்னர் தொழிலை விஸ்தரிக்க ஜானகி முடிவுசெய்தார். இதனால் தனது அழகு நிலையத்திற்கும் வரும் இளம் பெண்களுக்கு வலை விரித்தார்.

சொகுசாகவும் கை நிறையப் பணத்துடன் வாழ வேண்டுமானால் எனது பேச்சைக் கேளுங்கள் என்று ஆரம்பித்துசினிமா, டிவியில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகவும் கூறி அவர்களை இழுத்தார்.

தனது வலையில் விழுந்த பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தினார். முக்கியப் பிரமுகர்கள், தொழிலதிபர்கள்மற்றும் பணக்காரர்களின் கெஸ்ட் ஹவுஸ்களுக்கும் ஹோட்டல்களுக்கும் அந்தப் பெண்களை அனுப்பி வைத்தார்.

இதற்காக தொலைபேசி, செல்லுலார் போன் போன்றவற்றையும் அவர் பயன்படுத்தி வந்துள்ளார். மேலும்ஜாபர்கான்பேட்டை பகுதியில் பெரிய வீடு ஒன்றையும் வாடகைக்கு எடுத்துள்ளார். அங்கும் இந்த தொழிலை நடத்திவந்தார்.

விபச்சாரத் தொழில் படு சுறுசுறுப்பாக நடந்து வந்ததால், அழகு நிலையத்தை மூடி விட்டார்.

இந்த நிலையில் ஜானகியின் தொழில் குறித்து போலீசாருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து உதவி கமிஷனர்விஜயகுமார் தலைமையிலான போலீசார் ஜாபர்கான்பேட்டையில் உள்ள ஜானகியின் வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு விபச்சாரம் நடந்து வந்தது தெரிய வந்தது. கையும் களவுமாக ஒரு வாடிக்கையாளரும், விபச்சாரப்பெண்ணும் பிடிபட்டனர். இவர்கள் தவிர லட்சுமி, சுவாதி மற்றும் ஜோதி ஆகிய 3 விபச்சாரப் பெண்களும்பிடிபட்டனர்.

வாடிக்கையாளர்களை அழைத்து வரும் பணியில் ஈடுபட்டிருந்த ராஜேந்திரன், சீனிவாசன் ஆகியோரும்பிடிபட்டனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் தங்கள் தவறுகளை அவர்கள் ஒத்துக்கொண்டதால் அவர்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதைக் கட்டியதும் அனைவரும்விடுவிக்கப்பட்டனர்.

மருத்துவத்துக்கு தலைக் குனிவு:

செக்ஸ் ஊழல் தொடர்பாக டாக்டர் பிரகாஷ் முதலில் பிடிபட்டார். பின்னர் சமீபத்தில்தான் மருத்துவமனையில்சாதாரண நர்ஸாக பணியாற்றி, பெரிய அளவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட நளினி என்பவர் பிடிபட்டார்.

இந்த நிலையில் மற்றொரு டாக்டர், அதுவும் பெண் டாக்டர் பிடிபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவத் தொழிலின் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் நடந்து கொள்ளும் இவர்களால் மருத்துவத் துறைக்கேபெரும் தலைக் குனிவு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+