சென்னையில் டெலிபோன் கட்டணம் வசூலிக்கும் மொபைல் வேன்கள்
சென்னை:
சென்னை மாநகர மக்கள் தங்களுடைய தொலைபேசிக் கட்டணங்களை இனிமேல் தெருவுக்குத் தெரு வரும்நடமாடும் தொலைபேசிக் கட்டண மையங்களிலேயே கட்டலாம்.
இந்தியத் தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., இதற்காக சென்னையில் இரண்டு இடங்களில்மொபைல் வேன் வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி சென்னையின் தென் பகுதி மக்களின் வசதிக்காக இன்று அடையாறில் முதல் மொபைல் தொலைபேசிக்கட்டண மைய வேன் தொடங்கி வைக்கப்பட்டது.
அடையாறு தொலைபேசி இணைப்பகம் அருகே, போக்குவரத்துப் போலீஸ் அதிகாரியான கருணாசாகர் இதைத்தொடங்கி வைத்தார்.
இதேபோன்ற மொபைல் வேன் வசதி நாளை முதல் சென்னையின் வடக்குப் பகுதியிலும் இயங்கத் தொடங்கும்என்று பி.எஸ்.என்.எல். அதிகாரியான வெங்கடரமணி தெரிவித்தார்.
தொலைபேசிக் கட்டணத்திற்குரிய டிடி, செக் அல்லது பே ஆர்டர்கள் இந்த மொபைல் வேன்களில் பெற்றுக்கொள்ளப்படும் என்று கூறிய வெங்கடரமணி, இதற்கான ரசீதுகளும் உடனடியாக வழங்கப்படும் என்றும் கூறினார்.
இந்த வேன்கள் எங்கே, எப்போது வந்து நிற்கும் என்பது உள்ளூர் பத்திரிகைகள் மூலம் அறிவிக்கப்படும் என்றும்நிருபர்களிடம் வெங்கடரமணி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications