ஆணா? பெண்ணா?: கண்டுபிடித்த 56 ஸ்கேனிங் மையங்களுக்கு சீல்
சென்னை:
வயிற்றில் வளரும் சிசு, ஆணா, பெண்ணா என்பதை அறிய ஸ்கேன் செய்து பார்ப்பதற்து தமிழக அரசு தடைவிதித்துள்ளது. ஸ்கேனிங் கருவிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ஸ்கேனிங் கருவிகள்வைத்திருந்த 56 ஸ்கேனிங் மையங்கள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிசுக்களை இனம் கண்டறியும் சோதனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பான கருவிகளைபயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து சட்டவிரோதமாக இந்த கருவிகளை வைத்திருந்த 1625 மையங்கள் மீது நடவடிககைஎடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் 56 மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 19 ஸ்கேனிங் கருவிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோயம்புத்தூரில் 7, தூத்துக்குடி,விருதுநகரில் தலா 6, ஈரோட்டில் 5 கருவிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
அனுமதியில்லாமல் ஸ்கேனிங் கருவிகளை வைத்திருப்போர் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கையை மாநில அரசு எடுத்துள்ளது என்று அந்த அறிக்கையில்செம்மலை கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications