மதுரை அருகே கார்-வேன் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை அருகே காரும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாகஇறந்தனர்.
சங்கரன்கோவிலிலிருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த கார் மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகேவந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த வேன் மீது பயங்கரமாக மோதியது.
இவ்விபத்தில் காரில் வந்த தம்பதி மற்றும் அவர்களுடைய மகன் ஆகிய மூன்று பேரும் உடல் நசுங்கிஉயிரிழந்தனர்.
அவர்களுடைய மற்றொரு மகன் காயமே படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
விபத்தில் காயமடைந்த இவர்களின் இரண்டு உறவினர்கள் மற்றும் காரின் டிரைவர் ஆகியோர் மதுரை அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications