இலங்கை: மே மாதம் அமைதிப் பேச்சு துவக்கம்?
கொழும்பு:
இலங்கை அரசுக்கம் விடுதலைப்புலிகளுக்கும் இடையே வரும் மே மாதம் முதல் வாரத்தில் பேச்சுவார்த்தைதுவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இன்னும் ஆறு வாரத்தில், அதாவது மே மாதத் துவக்கத்தில் பேச்சுவார்த்தை துவங்கலாம் என்று தான்எதிர்பார்ப்பதாக பெய்ரிஸ் நிருபர்களிடம் தெரிவித்தார்.
இதற்காக புலிகள் மூன்று கோரிக்கைகளை விடுத்துள்ளதாகவும் தெரிகிறது. நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தைமுழுமையாக அமல்படுத்த வேண்டும், தங்கள் மீதான தடையை நீக்க வேண்டும் மற்றும் இலங்கையின் வடக்குமற்றும் கிழக்குப் பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் ஆகியவையே புலிகளின் கோரிக்கைகளாகும்.
இந்த மூன்றுமே இலங்கை அரசுக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை. தனி நாடு கோரிக்கை தவிர வேறு எதைவேண்டுமானாலும் செய்வதற்குத் தயார்தான் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஏற்கனவே கூறியுள்ளார்என்பது அனைவருக்கும் தெரிந்ததுதானே.
இதையடுத்து அமைதிப் பேச்சுவார்த்தையைத் துவக்குவதற்கான சுமூகமான சூழ்நிலை உருவாகியுள்ளதை இருதரப்பினருமே உணர்ந்துள்ளதால், பேச்சுவார்த்தையைத் துவக்க இதுதான் சரியான நேரம் என்று கருதுகின்றனர்.
அமைதிப் பேச்சுவார்த்தையில் எதைப் பற்றியெல்லாம் பேச வேண்டும் என்று முதலில் இரு தரப்பிலும் ஒப்பந்தம்செய்து கொண்டால் வசதி என்று இலங்கை அரசு கருதுகிறது.
இதற்கிடையே நார்வே தூதுக் குழுவின் தலைவரும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சருமான விடார்ஹெல்கெசன் அடுத்த மாதம் வன்னிக்குச் சென்று பிரபாகரனைச் சந்திக்கவுள்ளார்.
அதற்குப் பிறகுதான் பேச்சுவார்த்தையைத் துவக்குவதற்கான சரியான நாள் தெரிய வரும். அதற்கு முன்னதாகவே(ஏப்ரல் 8ம் தேதி) யாழ்ப்பாணம்-கண்டி நெடுஞ்சாலை போக்குவரத்துக்குத் திறந்துவிடப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications