சென்னை கோட்டையில் கோவை தம்பதி விஷமருந்தி தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கோயம்பத்தூரைச் சேர்ந்த ஒரு தம்பதி சென்னை தலைமைச் செயலகம் முன்பாக விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூரைச் சேர்ந்த வேலு(45)-நளினி(41) தம்பதி நேற்று (புதன்கிழமை) தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச்சந்தித்து மனு கொடுப்பதற்காக தலைமைச் செயலகத்துக்கு வந்தனர்.

பட்ஜெட் தாக்கலுக்குப் பின் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் கார்கள் வெளியேறிக் கொண்டிருந்தபோதுஇந்தத் தம்பதியர் கோட்டை வளாகத்திற்குள் நுழைந்தனர்.

பின்னர் அந்தத் தம்பதியர் திடீரென்று தங்கள் கையில் வைத்திருந்த பாட்டிலைத் திறந்து அதிலிருந்த விஷத்தைக்குடித்துவிட்டு மயங்கி சரிந்தனர்.

இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைப் பார்த்து அதிர்ந்து போன கோட்டைவளாகத்திற்குள் இருந்தவர்கள், அந்தத் தம்பதியரை உடனடியாக சென்னை அரசு மருத்துவனையில் அள்ளிக்கொண்டுபோய்ச் சேர்த்தனர்.

>ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு வேலு உயிரிழந்தார். அவருடைய மனைவி நளினியும் இன்றுஅதிகாலை பரிதாபமாக மரணமடைந்தார்.

எதற்காக இந்தத் தம்பதியர் கோட்டைக்கு வந்தார்கள் என்று தெரியவில்லை. முதல்வர் ஜெயலலிதாவிடம் மனுகொடுப்பதற்கு அங்குள்ள போலீசார் அவர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, விஷம் குடித்த தம்பதியரைக் காப்பாற்ற முயற்சி செய்யாமல் கோட்டை வாசலில் காவலுக்கு நின்றபோலீசார் மிகவும் அலட்சியமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்று சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் விஜயகுமார் கூறினார்.

தற்கொலை செய்த கோவை தம்பதியின் மகளுக்கு அரசு வேலை: ஜெ. உத்தரவு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+