குவைத் பெண்ணுக்கு ஜாமீன்: திருமண ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த குவைத் பெண் தலால் ஆஸ்மி ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டதையடுத்து, அவருக்குத் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
ஆஸ்மிக்கு ஆதரவாக அனைத்துத் தரப்பு மக்களும் கட்சிப் பிரமுகர்களும் குரல் எழுப்பி வந்ததையடுத்து, அவரைஜாமீனில் விடுவிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று மாலை ஆஸ்மி ஜாமீனில்விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையே மதிமுக பொதுச் செயலாளரான வைகோவின் வேண்டுகோளுக்கிணங்க, ஆஸ்மி இந்தியாவைவிட்டு வெளியேற்றப்பட மாட்டார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி உறுதியளித்துள்ளார்.
இதையடுத்து ஆஸ்மியுடன் அவருடைய காதலர் காதர் பாஷாவைத் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள்தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட ஆஸ்மி விடுதலைக்கு உதவிய அனைவருக்கும் நன்றிதெரிவித்த காதர் பாஷா, தங்களுடைய திருமணம் தமிழகத்திலேயே நடைபெறும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications