"சரவண பவன்" ராஜகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கொலை வழக்கில் கைதாகி சென்னை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஓட்டல் சரவண பவன் அதிபரானராஜகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.
ஜீவஜோதியைக் கடத்திய வழக்கிலும் அவருடைய கணவர் சாந்தகுமாரைக் கொலை செய்த வழக்கிலும் கைதானராஜகோபால், சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்குகளின் விசாரணை தொடர்ந்து நடந்து வந்துள்ள நிலையில், தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்றுசென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜகோபால் மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ராஜகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
கடலூரிலேயே ராஜகோபால் தங்கியிருக்க வேண்டும் என்றும், அங்குள்ள மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில்தினமும் இரண்டு முறை ஆஜராக வேண்டும் என்று இம்மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications