வெகு விரைவில் தமாகா இணையும்: காங். நம்பிக்கை
மதுரை:
தங்கள் கட்சியுடன் தமாகா எப்போது இணையும் என்பதுதான் இப்போதைய கேள்வியே தவிர, இணைப்பு உண்டா,இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லை என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ரமேஷ்சென்னிதாலா இன்று (செவ்வாய்க்கிழமை) கூறினார்.
காங்கிரசுடன் தமாகவை இணைப்பது குறித்து திங்கள்கிழமை வாசனை சந்தித்து பேசினார் ரமேஷ் சென்னிதாலா.இணைப்பு குறித்து அவர் இன்று அவர் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:
தங்கள் கட்சியுடன் தமாகா எப்போது இணையும் என்பதுதான் இப்போதைய கேள்வியே. இணைப்பு உண்டா,இல்லையா என்ற கேள்விக்கே இடம் இல்லை.
இணைப்புக் குறித்து வாசனுடன் பேசியது நம்பிக்கையளிக்கும் விதமாக உள்ளது. இனி எப்போது இணைவதுஎன்பது குறித்து அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
இதுகுறித்து தன் கட்சியின் மூத்த தலைவர்களுடன் பேச வேண்டும் என்று வாசன் கூறினார். நாங்கள் இந்ததேதிக்குள் இணைய வேண்டும் என்று எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை.
காங்கிரஸில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும் திரும்பவும் கட்சியில் இணைய வேண்டும் என்று காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி விரும்புகிறார். அதே போல் தான் வாழப்பாடி, குமரி அனந்தன் ஆகியோர் காங்கிரஸில்இணைந்துள்ளனர்.
இதனால் தமிழக காங்கிரஸ் மேலும் வலுவடைந்துள்ளது. தமாகா, காங்கிரசுடன் இணைந்தால், தமாகாவை அதிமுகஉடைக்கும் என்று கூறுகிறார்கள். இது உண்மையல்ல.
காங்கிரசும், தமாகாவும் சகோதரக் கட்சிகள். உள்கட்சி விவகாரம் போன்ற இதில் எப்படி அதிமுக தலையிடும் என்றுரமேஷ் சென்னிதாலா கூறினார்.












Click it and Unblock the Notifications