தாராபுரம்: கத்தி முனையில் பெண்ணிடம் நகை-பணம் கொள்ளை
தாராபுரம்:
தாராபுரத்தில் வீட்டிலிருந்த பெண்ணை இன்று (சனிக்கிழமை) காலை கத்தி முனையில் மிரட்டிய ஒரு கும்பல்,அவரிடமிருந்து நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு ஓடிவிட்டது.
இன்று காலை 10 மணிக்கு அந்த வீட்டிற்கு வந்த கும்பல், அங்கிருந்த பெண்ணிடம் "நாங்கள் உங்கள் வீட்டின் முன்பந்தல் போடுவதற்காக வந்துள்ளோம்" என்று கூறினர்.
பின்னர் அந்தப் பெண் உள்ளே சென்றவுடன், இந்தக் கும்பலும் அவர் பின்னாடியே சென்றது.
அதன் பிறகு திடீரென்று அந்த மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி, அவர் போட்டிருந்த நகைகளைக் கழற்றித் தருமாறுமிரட்டினர்.
அந்தப் பெண் உடனே தான் போட்டிருந்த நகைகளைக் கழற்றிக் கொடுத்தார். அதன் பிறகும் அவர்கள்அப்பெண்ணை மிரட்டி, பீரோ சாவியைப் பிடுங்கித் திறந்து அதிலிருந்து பணம் மற்றும் நகைகளை அள்ளஆரம்பித்தனர்.
அப்போது அந்தப் பெண் போட்ட சத்தத்தில் அருகில் கட்டட வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடி வந்தனர்.இதையடுத்து அரைகுறையாகக் கொள்ளையடித்துக் கொண்டிருந்த அந்த மர்ம நபர்கள் ஓடிவிட்டனர்.
மோப்ப நாய்களுடன் விரைந்து வந்த போலீசார் கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
கொள்ளை போன பணம் மற்றும் பொருட்களின் மதிப்பு எவ்வளவு என்று இன்னும் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications