சட்டப்படி பிரபாகரன் குற்றவாளிதான்: சோனியா
Subscribe to Oneindia Tamil
குவகாத்தி:
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை சம்பவத்தில் விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளைபிரபாகரன் முக்கியக் குற்றவாளி என்பதால் அவர் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும் என்று அகில இந்தியகாங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி இன்று (சனிக்கிழமை) கூறினார்.
குவகாத்தியில் நடந்த 14 மாநில காங்கிரஸ் முதல்வர்களின் மாநாட்டில் உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய சோனியாகூறியதாவது:
ராஜிவ் கொலைக்குத் திட்டமிட்டுக் கொடுத்ததன் மூலம் பிரபாகரன் சட்டப்படி குற்றவாளிதான்.
எனவே அவர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டே ஆக வேண்டும். இந்த வழக்கை அவர் சந்தித்தே ஆகவேண்டும் என்றுதான் காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.
பிரபாகரனை ஒப்படைக்கும்படி இலங்கை அரசுக்கு ஏற்கனவே இந்திய அரசும் கோரிக்கை விடுத்துள்ளது என்றார்சோனியா.












Click it and Unblock the Notifications