வள்ளியூர் அருகே வேன்-பஸ் மோதல்: 5 ஆந்திர சுற்றுலா பயணிகள் சாவு
வள்ளியூர்:
வள்ளியூர் அருகே ஆந்திராவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சென்ற வேனும் அரசு பஸ்சும் நேருக்கு நேர்மோதிக் கொண்ட பயங்கர விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 ஆந்திர சுற்றுலாப் பயணிகள் உடல் நசுங்கிஉயிரிழந்தனர்.
ஆந்திராவைச் சேர்ந்த சில சுற்றுலாப் பயணிகள் ஒரு வேனில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுகொண்டிருந்தனர்.
எதிர்த் திசையில் நாகர்கோவிலிலிருந்து மதுரை நோக்கி அரசு பஸ் ஒன்று படுவேகமாக வந்து கொண்டிருந்தது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே வந்து கொண்டிருந்தபோது, ஒரு வளைவில் வேன் மீது அரசு பஸ்பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் வேன் சுக்கு நூறாக நொறுங்கியது. வேனில் பயணம் செய்த இரண்டு பெண்கள் உள்பட ஐந்துஆந்திர சுற்றுலாப் பயணிகள் உடல் நசுங்கி அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவ்விபத்தில் ஐந்து குழந்தைகள் உள்பட ஏழு பேர் காயமடைந்தனர். இவர்களில் இருவரின் நிலைமை மிகவும்கவலைக்கிடமாக உள்ளது.
இந்த விபத்து தொடர்பாக பஸ்சின் டிரைவர் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications