காஞ்சி: 2 குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை
காஞ்சிபுரம்:
கணவரின் முதல் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தனது 2 குழந்தைகளுக்குப் பூச்சி மருந்தைக் கொடுத்து தானும்குடித்துத் தற்கொலை செய்து கொண்டார் 2வது மனைவி.
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். இவர் ஒரு விவசாயி. 40 வயதாகும்கருணாகரனுக்கும், ரமணி என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.இவர்களுக்கு குழந்தை ஏதும் இல்லை.
இந்நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு லட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் கருணாகரன்.இவர்களுக்கு 3 மகள்களும் ஒரு மகனும் பிறந்தனர். இரண்டு மனைவிகளையும் ஒரே வீட்டில் வைத்துக் குடும்பம்நடத்தினார் கருணாகரன்.
இரண்டாவது மனைவியையும் அதே வீட்டிலேயே வைத்திருந்ததால் அடிக்கடி லட்சுமியும் ரமணியும் சண்டைபோடுவது வழக்கமாம். இதனால் நிம்மதி இழந்த நிலையில் இருப்பாராம் கருணாகரன்.
இந்நிலையில், பள்ளி விடுமுறைக்காக மகள்கள் ரஞ்சிதா மற்றும் ராணி ஆகியோரை தனது தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்ட லட்சுமி, வீட்டில் இன்னொரு மகள் ராதா மற்றும் மகன் பூவரசன் ஆகியோருடன் இருந்தார்.
வீட்டில் ரமணியும், லட்சுமியும் மட்டும் இருந்தபோது ஏதோ காரணத்திற்காக வாய்ச்சண்டை ஏற்பட்டுள்ளது. அதுகைகலப்பாக மாறும் முன்பு வீட்டுக்கு வந்து விட்ட கருணாகரன் இருவரையும் சமாதானப்படுத்தி விட்டு வெளியேசென்றுள்ளார்.
அவர் போன பின் லட்சுமியுடன் மீண்டும் சண்டை போட்டுள்ளார் ரமணி. இதனால் மனம் உடைந்த லட்சுமி,வீட்டிலிருந்த தனது மகளுக்கும், மகனுக்கும் பூச்சி மருந்தை கரைத்துக் கொடுத்தார். பின்னர் தானும் அதைக்குடித்தார்.
பயந்து போன ரமணி சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து 3பேரையும் காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு மூவருமே சிகிச்சைபலனளிக்காமல் இறந்தனர்.
கருணாகரன் மற்றும் ரமணியிடம் காஞ்சிபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications