காஞ்சி: 2 குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை
காஞ்சிபுரம்:
கணவரின் முதல் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தனது 2 குழந்தைகளுக்குப் பூச்சி மருந்தைக் கொடுத்து தானும்குடித்துத் தற்கொலை செய்து கொண்டார் 2வது மனைவி.
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். இவர் ஒரு விவசாயி. 40 வயதாகும்கருணாகரனுக்கும், ரமணி என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.இவர்களுக்கு குழந்தை ஏதும் இல்லை.
இந்நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு லட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் கருணாகரன்.இவர்களுக்கு 3 மகள்களும் ஒரு மகனும் பிறந்தனர். இரண்டு மனைவிகளையும் ஒரே வீட்டில் வைத்துக் குடும்பம்நடத்தினார் கருணாகரன்.
இரண்டாவது மனைவியையும் அதே வீட்டிலேயே வைத்திருந்ததால் அடிக்கடி லட்சுமியும் ரமணியும் சண்டைபோடுவது வழக்கமாம். இதனால் நிம்மதி இழந்த நிலையில் இருப்பாராம் கருணாகரன்.
இந்நிலையில், பள்ளி விடுமுறைக்காக மகள்கள் ரஞ்சிதா மற்றும் ராணி ஆகியோரை தனது தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்ட லட்சுமி, வீட்டில் இன்னொரு மகள் ராதா மற்றும் மகன் பூவரசன் ஆகியோருடன் இருந்தார்.
வீட்டில் ரமணியும், லட்சுமியும் மட்டும் இருந்தபோது ஏதோ காரணத்திற்காக வாய்ச்சண்டை ஏற்பட்டுள்ளது. அதுகைகலப்பாக மாறும் முன்பு வீட்டுக்கு வந்து விட்ட கருணாகரன் இருவரையும் சமாதானப்படுத்தி விட்டு வெளியேசென்றுள்ளார்.
அவர் போன பின் லட்சுமியுடன் மீண்டும் சண்டை போட்டுள்ளார் ரமணி. இதனால் மனம் உடைந்த லட்சுமி,வீட்டிலிருந்த தனது மகளுக்கும், மகனுக்கும் பூச்சி மருந்தை கரைத்துக் கொடுத்தார். பின்னர் தானும் அதைக்குடித்தார்.
பயந்து போன ரமணி சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து 3பேரையும் காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு மூவருமே சிகிச்சைபலனளிக்காமல் இறந்தனர்.
கருணாகரன் மற்றும் ரமணியிடம் காஞ்சிபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.