தீர்ப்புகளைத் "திருத்திய" வக்கீலின் உதவியாளர் கைது
மன்னார்குடி:
கோர்ட் தீர்ப்புகளில் திருத்தம் செய்து, கோர்ட் ஆவணங்களை திருடி பொய்யான ஆவணங்களை வைத்தவழக்கறிஞரின் உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் அம்பி என்ற நாராயணசாமி. இவர் மன்னார்குடி மாஜிஸ்திரேட்கோர்ட்டில் பணியாற்றி வரும் வழக்கறிஞர் ஒருவரின் அலுவலகத்தில் உதவியாளராக இருந்து வருகிறார்.
இவர் மீது மன்னார்குடி மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதியான மகிழேந்தி போலீஸில் புகார் கொடுத்தார்.
தனது அலுவலகத்திற்குள் யாரும் இல்லாத நேரத்தில் அம்பி புகுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த தீர்ப்புகளின் அசல்பிரதியில் திருத்தம் செய்துள்ளார் என்றும் அங்கிருந்த ஆவணங்களைத் திருடி விட்டு, போலியான ஆவணங்களைவைத்துள்ளார் என்றும் நீதிபதி மகிழேந்தி தன் புகாரில் கூறியிருந்தார்.
கடந்த சில நாட்களாகவே அம்பி இவ்வாறு செய்து வந்துள்ளதாகவும் நீதிபதி மகிழேந்தி கூறியிருந்தார்.
புகாரை ஏற்ற மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, அம்பியைக் கைது செய்து விசாரித்துவருகிறார்.












Click it and Unblock the Notifications