மக்களவை சபாநாயகராகிறார் மனோகர் ஜோஷி
டெல்லி:
முன்னாள் மகாராஷ்டிர முதல்வரும் தற்போதைய மத்திய அமைச்சருமான சிவசேனை கட்சியைச் சேர்ந்த மனோகர்ஜோஷி லோக்சபாவின் அடுத்த சபாநாயகராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
வரும் 10ம் தேதி நடைபெறவுள்ள லோக்சபா சபாநாயகருக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில்ஜோஷி நிறுத்தப்படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் எதிர்க் கட்சித்தலைவர்கள் ஆகியோருடன் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் நேற்று தனித்தனியாகஆலோசனை நடத்திய பிறகே ஜோஷி தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
எதிர்க் கட்சிகள் உள்பட இதுவரை யாரும் சபாநாயகர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. நாளைபகலுடன் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிகிறது.
வேறு யாரும் இப்பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவில்லையென்றால் ஜோஷியே லோக்சபாவின்சபாநாயகராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
பெட்ரோலியத்துறை அமைச்சரான ராம் நாயக், சுற்றுலாத்துறை அமைச்சரான ஜக்மோகன் மற்றும் பாஜகவின்செய்தித் தொடர்பாளரான விஜய் குமார் மல்ஹோத்ரா ஆகியோரின் பெயர்கள் கடந்த ஒரு வார காலமாக இந்தசபாநாயகர் பதவிக்கு அடிபட்டன என்பது குறிப்பிடத்தக்கது.