கைதிகள் தப்புவதை தடுக்கும் "வீடியோ கான்பரன்ஸ்" சட்ட மசோதா அறிமுகம்
சென்னை:
தமிழகத்தில் கைதிகள் தப்பும் சம்பவங்களைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், சிறைகளையும் நீதிமன்றங்களையும்இணைக்கும் "வீடியோ கான்பரன்ஸ்" சட்ட மசோதா இன்று சட்டசடையில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக சட்ட அமைச்சர் ஜெயக்குமார் இம்மசோதாவை சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். இதன் மூலம்நீதிபதியின் முன் குற்றவாளிகளை நிறுத்தாமல் அவர்களை விசாரிக்க இந்த மசோதா வகை செய்யும்.
சிறைகளிலிருந்து குற்றவாளிகளை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லும்போது, அவர்கள் தப்பிச் செல்வதற்குவாய்ப்புள்ளது. மேலும் இதற்காக ஆகும் செலவும் மிக அதிகம்.
ஆனால் இந்தப் புதிய "வீடியோ கான்பரன்ஸ்" முறை மூலம் இத்தகைய பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும் என்றார்ஜெயக்குமார்.
இந்த மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிர்ப்பதாக திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும்தெரிவித்தன.
பாதுகாப்பைப் பலப்படுத்துவதை விட்டுவிட்டு இதுபோன்ற புதிய முறைகளை அறிமுகப்படுத்துவதனால் எந்தப்பலனும் ஏற்படப் போவதில்லை என்றும் எதிர்க் கட்சிகள் கூறின.












Click it and Unblock the Notifications