நெடுமாறன் கைதுக்கு வைகோ கடும் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அறவழியில் போராட்டம் நடத்திய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனைஜெயலலிதா அரசு கைது செய்துள்ளதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஈழத் தமிழர்களுக்கு எதிராக, தமிழக சட்டசபையில் இயற்றப்பட்டுள்ளதீர்மானத்தை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தார் நெடுமாறன்.
ஜனநாயக வழியில் அவர் நடத்தவிருந்த போராட்டத்தைத் தடுத்ததோடு மட்டுமல்லாமல், அவரைக் கைது செய்திருப்பது கடும்கண்டனத்துக்குரியது என்று வைகோ கூறியுள்ளார்.
இந் நிலையில் கைது செய்யப்பட்ட நெடுமாறனை இரவிலேயே போலீசார் விடுதலை செய்துவிட்டனர். ஆனால், பலர் மீதுவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications