ஷார்ஜாவில் தமிழ்ப் புத்தாண்டு விழா கொண்டாட்டம்
ஷார்ஜா:
ஷார்ஜாவில் தமிழ்ப் புத்தாண்டு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள ஷார்ஜாவில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தில்நடைபெறும் அனைத்து விழாக்களையும் இவர்களும் அங்கே கொண்டாடுவது வழக்கம்.
அவ்வகையில் இந்த ஆண்டும் அவர்கள் தமிழ்ப் புத்தாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினர்.
ஷார்ஜா தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் நடந்த கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு இந்த விழாவின்போது பரிசுகள் வழங்கப்பட்டன.
சென்னையில் உள்ள சிவானந்த சரஸ்வதி ஆசிரமத்தின் நிர்வாகியான எஸ். ராஜாராமை ஷார்ஜா தமிழ்ப்பண்பாட்டுக் கழகம் இவ்விழாவின்போது பாராட்டிச் சிறப்பித்தது.
இந்தப் பாராட்டுக்களையும், கெளரவத்தையும் அளித்த ஷார்ஜா தமிழர்களுக்கு ராஜாராம் நன்றி கூறினார்.
கூட்டுக் குடும்பத்தின் சிறப்பையும், வயது முதிர்ந்த பெற்றோர்களை இன்றைய இளைஞர்கள் கவனித்துக் கொள்ளவேண்டியதன் அவசியத்தையும் இந்த ஆசிரமத்தின் செயல் நிர்வாகியான லட்சுமி ராஜாராம் எடுத்துக் கூறினார்.
ஷார்ஜாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரியான பொன்னுச்சாமி, அங்குள்ள இந்திய சங்கத்தின் துணைத்தலைவரான கமருதீன் ஹாஜி மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மானேஜரான ஷியாம் சுந்தர் ஆகியோர்இந்த விழாவில் வாழ்த்துரை வழங்கினர்.
ஷார்ஜாவிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் என்று இந்தத் தமிழ்ப் புத்தாண்டுவிழாவின்போது வலியுறுத்தப்பட்டது.
விழாவின் இறுதியில் சிறுவர்-சிறுமியர் கலந்து கொண்ட வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. அரபுநாடுகளில் வாழும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இவ்விழாவிற்கு வந்து மகிழ்ந்தனர்.












Click it and Unblock the Notifications