வாணியம்பாடியில் கருணாநிதியின் பிரச்சார வேட்டை
சென்னை:
வாணியம்பாடி தொகுதியில் போட்டியிடும் பாடகர் நாகூர் ஹனீபாவை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி தனது பிரச்சாரத்தை 21ஆம்தேதி வாணியம்பாடியில் தொடங்குகிறார்.
இது குறித்து திமுக எம்.எல்.ஏ துரைமுருகன் கூறியதாவது:
திமுக சார்பில் வாணியம்பாடி தொகுதியில் நாகூர் ஹனிபா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி 21, 22தேதிகளில் வாணியம்பாடியில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.
21ஆம் தேதி மாலை 5 மணிக்கு தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். 5 மணிக்கு கலந்தராவில் தொடங்கி, 5.30 க்குபெத்தவேப்பம்பட்டு, 6 மணிக்கு முல்லை, 6.30 மணிக்கு நிம்மியம்பட்டு வரை வேனின் மூலம் பிரச்சாரம் செய்கிறார். இரவு 7 மணிக்குஆலங்காயம் பொது கூட்டத்தில் பிரச்சார உரை நிகழ்த்துவார்.
பின்னர் 8.30 மணிக்கு வெள்ளக்குட்டையில் பிரச்சாரம் முடித்துவிட்டு, மீண்டும் 9 மணிக்கு ஆம்பூரில் நடக்கும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசுவார்.
மீண்டும் 22ஆம் தேதி மாலை 5 மணிக்கு, சான்றோர் குப்பத்தில் வேன் மூலம் தன் பிரச்சாரத்தை துவக்குகிறார். பின்னர், பெரியாங்குப்பம்பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு, ஆலாங்குப்பம், மாராப்பட்டு, கிரிசமுத்திரம், வளையாம்பட்டு ஆகிய இடங்களில் பிரச்சாரத்தைதொடர்கிறார். இறுதியாக, வாணியம்பாடியில் நடக்கும் பிரச்சார கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார் என்றார் துரைமுருகன்.












Click it and Unblock the Notifications