பெங்களூர்: மாநகராட்சி நடவடிக்கையால் ஏழை தமிழர்கள் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பெங்களூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்ற பெயரில் ஏழைத் தமிழர்கள் வாழ்ந்து வந்த பல வீடுகளை ரயில்வேமற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தள்ளினர்.
பெங்களூர் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தையொட்டி லக்ஷ்மணபுரி பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக ரயில்வேபாதையையொட்டி ஏராளமான தலித்துகள் சிறிய வீடுகளைக் கட்டிக் கொண்டு வசித்து வருகின்றனர். இதில்பெரும்பாலானவர்கள் தமிழர்கள்.
ஆனால் அப்பகுதியை ஆக்கிரமித்து அவர்கள் வீடுகளைக் கட்டியுள்ளதாக கூறிய ரயில்வேயும் பெங்களூர்மாநகராட்சி அதிகாரிகள் திடீரென அந்தப் பகுதிக்குச் சென்று அனைத்து வீடுகளையும் இடித்துத்தரைமட்டமாக்கினர்.
இதனால் அவர்கள் வீடுகளை இழந்து நடுத் தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications