பெண் டாக்டர் கொலை: 4 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் பிரபல பெண் டாக்டரைக் கொன்ற சம்பவத்தில் 4 பேரைப் போலீசார் கைது செய்தனர்.

சென்னை தி. நகரில் பிரபல சித்த மருத்துவர் மலர்க்கொடி செவ்வாய்க்கிழமை இரவு படுகொலை செய்யப்பட்டார்.அவரது வீட்டிலிருந்து நகைகள் மற்றும் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.

சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக கொலையாளிகளைத்தனிப்படைப் போலீசார் தேடி வந்தனர்.

கொலை செய்யப்பட்ட டாக்டர் மலர்க் கொடி பிணமாகக் கிடந்த அறையில் கொலையாளிகளில் ஒருவனுடையசட்டையைக் கைப்பற்றிய போலீசார் அதை வைத்துக் கொண்டு விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

அதன் அடிப்படையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அழகிரிசாமி மற்றும் முருகன், திருநெல்வேலி மாவட்டம்ஆலங்குளத்தைச் சேர்ந்த கோபி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த சக்திவேல் ஆகிய நான்குபேரைப் போலீசார் கைது செய்தனர்.

குற்றவாளிகள் அனைவரும் கட்டடத் தொழிலாளர்கள் என்றும் அவர்கள் கொலை நடந்த வீட்டிலேயேதங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

தன்னுடைய பூர்வீக நகைகளை டாக்டர் ஆனந்தகுமார் விற்று பணத்தை ரொக்கமாக வீட்டில் வைத்திருந்ததைத்தெரிந்து கொண்ட குற்றவாளிகள், அப்பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டனர்.

அந்த முயற்சியின் போது தான் டாக்டர் மலர்க் கொடியை அவர்கள் கொலை செய்து விட்டு, நகை மற்றும்பணத்தைக் கொள்ளையடித்தனர்.

கொலையாளிகளில் ஒருவரான சக்திவேலிடமிருந்து ரூ.90,000 பணத்தைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.இச்சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவரையும் போலீசார் தேடி வருவதாகக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+