மாமூல் வாங்கும் போலீசார் சஸ்பெண்ட்: தமிழக அரசு எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக தெரிய வந்தால் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்றுதமிழக உள்துறைச் செயலாளர் நரேஷ் குப்தா எச்சரித்துள்ளார்.

போலீஸ் அதிகாரிகள் அதிக அளவில் லஞ்சம், மாமூல் வாங்குவதாக அரசுக்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்துமாநிலத்திலுள்ள அனைத்து அதிகாரிகள் குறித்தும் ரகசிய தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து மாவட்ட அளவில் உள்ள எஸ்.பிக்கள், டிஐஜிக்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு தமிழகஉள்துறைச் செயலாளர் நரேஷ் குப்தா ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் கடுமையானஎச்சரிக்கைகளை விடுத்துள்ளார்.

நரேஷ் குப்தா அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

  • மாவட்ட எஸ்.பிக்கள், சரக டிஐஜிக்கள் உள்ளிட்ட அதிகாரிகள் தங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளிடமிருந்து மாமூல் வாங்குவதாக தெரிய வந்துள்ளது.

  • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தத் தவறை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

  • தொடர்ந்து மாமூல் மற்றும் லஞ்சம் வாங்குவதைத் தொடர்ந்தால் முன்பு மாதிரி மெமோ அல்லது டிரான்ஸ்பர் செய்யப்பட மாட்டார்கள். மாறாக உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்.

    தமிழக டிஜிபி நெய்ல்வாலுக்கும் தனியாக ஒரு சுற்றறிக்கையை நரேஷ் குப்தா அனுப்பியுள்ளார். அதில், லஞ்சம்வாங்கும் செயலில் ஈடுபட வேண்டாம் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை கூறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
    Mail this to a friend  Post your feedback  Print this page 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+