அப்பா மீது திருட்டு குற்றம்: அவமானத்தில் சிறுவன் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருட்டு வழக்கில் தந்தையை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரித்ததால்அவமானமடைந்த சிறுவன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.
சென்னை சூளை பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரை போலீசார் திருட்டு வழக்கு தொடர்பாக பிடித்துச் சென்றனர்.
இதையறிந்த ரவியின் 7ம் வகுப்பு படிக்கும் மகனான கார்த்திக் மிகவும் அவமானமடைந்தான்.
தனது தந்தை மீது குற்றப் பழி விழுந்து விட்டதே என்று எண்ணிய கார்த்திக் வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலைசெய்து கொண்டான்.
சூளை போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications