அரசு பஸ் டிரைவரின் கொடூரம்: 48 ஆடுகள் பரிதாப பலி
திருநெல்வேலி:
திருநெல்வேலி அருகே நடந்த சாலை விபத்தில் பஸ் மோதி 48 ஆடுகள் பரிதாபமாகப் பலியாயின.
திருநெல்வேலி-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கொங்கந்தன்பாரை என்ற இடத்தில் சனிக்கிழமைஅதிகாலை இந்த சம்பவம் நடந்தது.
அந்த சாலை வழியாக வந்த சுமார் 400 ஆடுகள், மேலப்பாளையம் மற்றும் குறிச்சி ஆகிய பகுதிகளை நோக்கி புல்மேயச் சென்று கொண்டிருந்தன.
அப்போது சாலையில் வேகமாக வந்த தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பஸ் ஒன்று படு வேகமாக ஆட்டுமந்தைக்குள் புகுந்தது. இதில் 48 ஆடுகள் நசுங்கி செத்தன. மோதிய வேகத்தில் பஸ் அங்கிருந்து சென்று விட்டது.
தகவல் அறிந்ததும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கேயே போஸ்ட்மார்ட்டம்நடந்தது.
பின்னர் ஆட்டின் சிதைவுகள் உரிமையாளர் இசக்கியிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்தச் சம்பவம் குறித்துமுன்னீர்பள்ளம் போலீஸார் வழக்குப் பதிவு விசாரித்து வருகிறார்கள்.